காதல் ஜோடிகள் கரண்ட் ஷாக்கால் தற்கொலை…!!!

Published by
kavitha

ஈரோடு மாவட்டம் ஆனந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (38). இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், மகனும் உள்ளனர். சுரேஷ்க்கும் அப்பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மனைவி ஜோதிக்கும் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு பேரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துள்ளனர்.ஜோதியுடன் சுரேஷ்க்கு உள்ள தொடர்பு குறித்து சிலர் மாரியம்மாளுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாரியம்மாள் சுரேசை கண்டித்து உள்ளார். இருப்பினும் ஜோதியை சந்திப்பதை சுரேஷ் கைவிடவில்லை. இதனால் மாரியம்மாளுக்கும் சுரேஷ்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சுரேசிடம் கோபித்துக்கொண்டு பூதப்பாடி அருகே அலங்காரியூரில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு மாரியம்மாள் சென்றுவிட்டார்.மனைவி இல்லாததால் தனக்கு தன்னை கேட்க ஆளில்லை என்றதும், சுரேஷ் அடிக்கடி ஜோதியை தனிமையில் சந்தித்துள்ளார். ஜோதி திடீர் திடீரென வெளியே போவது, வருவது என இருந்துள்ளார். இதனை சந்தேகப்பட்ட ஜோதியின் கணவர் சின்னச்சாமி ஜோதியை பின்தொடர்ந்துள்ளார். அப்போது ஜோதியின் கூடாநட்பு  விவகாரம் சின்னச்சாமிக்கும் தெரியவந்தது.வீட்டுக்கு வந்த ஜோதியை கண்டித்த சின்னசாமி, இனி சுரேஷை சந்திக்கக் கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் சுரேசுடன் உள்ள தொடர்பை விட ஜோதி மறுத்து உள்ளார். இதன்காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சில நாட்கள் சின்னச்சாமியும் வேலைக்கு  வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்லாம் இருந்துள்ளார்.

சின்னச்சாமி வீட்டிலேயே இருந்ததால் ஜோதியால் சுரேஷை சந்திக்க முடியவில்லை. சமீபத்தில் சின்னச்சாமி வீட்டில் இல்லாத நேரத்தில் வெளியே சென்ற ஜோதி, சுரேஷை சந்தித்து, வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையை கூறியுள்ளார். மேலும் தன்னால் சின்னச்சாமியுடன் வாழ முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
வழக்கம்போல சுரேஷை சந்திப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அத்தாணி அருகே உள்ள வரதன் தோட்டம் என்ற பகுதிக்கு ஜோதி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சுரேஷ், ஜோதியுடன் பேசிக்கொண்டிருந்தார். மறுநாள் காலையில் இருவரும் அந்த இடத்தில் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

13 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

18 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

18 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

18 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

18 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 hours ago