“காசு வாங்கிய நாயே! ஓட்டுப்போட்டியா?” பட்டை நாமம் போட்ட வாக்காளர்களுக்கு..!போஸ்டர் ஒட்டி தீட்டி தீர்த்த வேட்பாளர்

Default Image
  • பணம் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கிய வேட்பாளருக்கு பட்டை நாமம் போட்ட வாக்காளர்கள்
  • போஸ்டர் ஒட்டி ஆதங்கத்தை தீர்த்த வேட்பாளர் என்ற தேர்தல் சுவராஸ்யம் பற்றி இந்த செய்தி தொகுப்பில் அறிவோம்.

 

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் ஆனது நடைபெற்றது. மேலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அவ்வாறு போட்டிட்ட இரு பெரும் கட்சிகளாக தமிழத்தில் காணப்படும் திமுக மற்றும் அதிமுக அதன் கூட்டணிகள் அதிக இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் திருவிழா என்றாலே ஆட்டத்திற்கு பாட்டத்திற்கும் பஞ்சம் இருக்காது அதில் பணத்தின் அதிக்கம் அளந்து கூறமுடியாத அளவிற்கு அலையாக ஓடும் அவ்வாறு மக்களுக்கு பணம் கொடுத்து அவர்களின் வாக்குகளை வேட்பாளர்கள் விளைக்கு வாங்கி ஜெயிக்கும் அவலம் ஜனநாயக நாட்டில் இருந்து கொண்டு தான் வருகிறது அதனை கண்கள் இருந்து குருடர்களாகவே அதிகாரிகள் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அதனை நிருபிக்கும் விதமாக இங்கு ஒரு கூத்து அரங்கேறியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழப்பளையூர் கிராமத்தில் கீழப்பளையூர் கிராமத்தில் தேர்தலில் பணம் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கிய வேட்பாளருக்கு பட்டை நாமம் போட்டுள்ளனர் வாக்காளர்கள் இதனால் கடும் விரக்தி அடைந்த வேட்பாளர்  “காசு வாங்கிய நாயே! ஓட்டுப்போட்டியா?” போஸ்டரில் தனது ஆதங்கத்தை அதில் கொட்டி தீர்த்து உள்ளார். வேட்பாளரால் ஓட்டப் பட்ட இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியும்,பேசும் பொருள் ஆகியும் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்