கள்ள காதலின் மகளையும் விட்டு வைக்காத கொடூரன் போஸ்கோ சட்டத்தில் கைது…!

Published by
Dinasuvadu desk
ஆவடி அருகே, கள்ளக்காதலியின் மகளை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆவடியை அடுத்த மோரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் இன்பநேசன்(வயது 33). இவர் தச்சு வேலை செய்யும் தொழிலாளி. இவருடைய மனைவிக்கு குழந்தைகள் கிடையாது. இன்பநேசனுக்கும் கணவரை இழந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.அந்த பெண்ணுக்கு, முதல் கணவர் மூலம் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இன்பநேசன் அவரது மனைவியை விட்டு விட்டு இந்த  பெண் மற்றும் அவரது பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் அந்த பெண்ணின் 13 வயது மகளுக்கு கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அந்த சிறுமியை பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர்.

அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவள் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைகேட்டு சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு யார் காரணம்? என சிறுமியிடம் உறவினர்கள்  விசாரித்தனர்.

அப்போது அந்த சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது இன்பநேசன்தான் தன்னை கற்பழித்ததாக கூறினார். அப்போது  இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் அந்த சிறுமி  தெரிவித்தார். ஆவடி,
பின்னர்  இது குறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபாராணி வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு சென்னை வேளச்சேரி பகுதியில் இருந்த இன்பநேசனை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தார்.அப்போது நடத்திய விசாரணையில் ,
இன்பநேசன் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதுடன், தானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி தனது தாய் உள்பட யாரிடமும் சொல்லாமல் இருந்து உள்ளார்.தற்போது சிறுமி இன்பநேசனால் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரியவந்ததையடுத்து இன்பநேசன் மீது காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு  அவரை நேற்று மாலை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்…
கள்ளக்காதலன் தாய் மற்றும் குழந்தையின் வாழ்க்கையில் விளையாடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது…
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

9 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago