கல்வியாளர்கள் மொழிப்பாடங்களில் உள்ள 2 தாள்களை ஒருங்கிணைத்ததற்கு எதிர்ப்பு!

Published by
Venu

தமிழக அரசு சார்பில்  மொழிப்பாடங்களில் உள்ள 2 தாள்களை ஒருங்கிணைத்து வெளியிடப்பட்டுள்ள அரசாணைக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை மாணவர்களின் சுமையை அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் ஒன், பிளஸ் டூ பொதுத்தேர்வுகளில் மொழிப்பாடங்களில் உள்ள 2 தாள்களை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வெழுத தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அரசாணை வெளியிட்டது  தமிழக அரசின் மொழிப்பாட இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தி.நகரில் கல்வியாளர்களின் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் இரண்டு மொழிப்பாடத்திற்கு நான்கு தாள்கள் வீதம் ஏறத்தாழ பத்து நாட்கள் செலவிடப்படுவதாலும், மாணவர்களின் தேர்வு சுமையை குறைக்கவுமே தாள்கள் இணைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய பாடத்திட்ட உருவாக்கத்தின் போது கல்வியாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்த அரசு, தற்போது யாருடைய கருத்துகளையும் கேட்காமல், தாமாக செயல்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மாணவர்களின் நலன் கருதி ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் மற்றும் வட மாநிலங்களை போன்றே மொழிபாடங்களுக்கு ஒரே தாள் என மாற்றம் செய்துள்ளதாக தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழ் மொழிசார்ந்த உணர்வுகளில் மற்ற மாநிலங்களை விட தனித்து நிற்பதாகவும், தமிழகத்தின் அடையாளமே அதன் மொழியால் தான் என குறிப்பிடும்  கல்வியாளர்கள் மொழிப்பாட தாள்களை குறைப்பது மாணவர்களின் அறநெறி சிந்தனையையும் குறைத்துவிடும் எனவும் எச்சரிக்கின்றனர்.

1978 – ஆம் ஆண்டு முதல் மொழி பாடங்களுக்கு இரண்டு தேர்வுகள் நடைபெறுவதாகவும், 40 ஆண்டுகால நடைமுறையை எந்த வித விவாதங்களுக்கும் உட்படுத்தாமல் தமிழக அரசு மாற்றியிருப்பது, மாணவர்களின் மொழி திறன், சிந்தனை வளம் மற்றும் படைபாற்றலில் பாதிப்பு ஏற்படும் என கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

17 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

20 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

2 hours ago