கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் ..!24 மணி நேரத்திற்கு பிறகுதான் எதையும் சொல்ல முடியும்..!தொண்டர்கள் அதிர்ச்சி

Default Image

காவேரி மருத்துவமனை தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று 10ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி.,உதயநிதி ஸ்டாலின்,கருணாநிதி மனைவி தயாளு அம்மாள்,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட காவேரி மருத்துவமனைக்கு சென்றனர்.மேலும் தயாளு அம்மாளுடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு சென்றனர்.திடீரென்று அனைவரும் வருவதால் அங்கு சிறிது பதற்றம் ஏற்பட்டுள்ளது.தயாளு அம்மாள் மருத்துவ மனைக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.இதேபோல் மு.க.அழகிரியும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.இன்று மாலை அறிக்கை ஓன்று வெளியாகியுள்ளது.அந்த விவரங்களை பார்ப்போம்.
இன்று மாலை(ஆகஸ்ட் 6 ஆம் தேதி) காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருந்தது  என்று  காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முதுமையால் கருணாநிதியின் உடல் உறுப்புகள் தொடர்ந்து மோசமடைந்துள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது.கருணாநிதியின் உடல்நிலை பற்றி அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்