கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் எதிரொலி ..!எழுந்து வா தலைவா" என தொண்டர்கள் கோஷம்!

Default Image

எழுந்து வா தலைவா” என தொண்டர்கள் உணர்ச்சி பெருக்குடன் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இன்று மாலை(ஆகஸ்ட் 6 ஆம் தேதி) காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருந்தது  என்று  காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முதுமையால் கருணாநிதியின் உடல் உறுப்புகள் தொடர்ந்து மோசமடைந்துள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது.கருணாநிதியின் உடல்நிலை பற்றி அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்..இதனால் காவேரி மருத்துவமனை முன்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.எழுந்து வா தலைவா” என தொண்டர்கள் உணர்ச்சி பெருக்குடன் கோஷம் எழுப்பி வருகின்றனர்.மேலும் நேரம் செல்லச் செல்லச் தொண்டர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்