கருணாநிதிக்கு மருத்துவ உதவி ..!ஸ்டாலின் குடும்பம் சொன்னால் தமிழக அரசு தயார்..!முதலமைச்சர் பழனிசாமி
காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைகளை பெற்று குணமடைந்து வருகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் முதல் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.இதனால் பல்வேறு அரசியல் தலைவர்களும் ,தொண்டர்களும் அவரை பார்க்க படையெடுத்து வருகின்றனர்.
நேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் தொடர்பு கொண்டு பேசினேன். தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன்.திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது முதலமைச்சர் பழனிசாமி கருணாநிதிக்கு தேவையான உதவிகள் செய்யதத்தயார் என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில் 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு மருத்துவ உதவிக்கு அவரின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டால், தமிழக அரசு உதவி செய்யத் தயார்.காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைகளை பெற்று குணமடைந்து வருகிறார் என்றும் கூறியுள்ளார் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்