கபினி அணையில் இருந்து காவிரியாற்றுக்கு நொடிக்கு 15,000 கனஅடி நீர் திறப்பு..!

Published by
Dinasuvadu desk

கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆறு தோன்றுமிடமான குடகு மாவட்டத்திலும் துணையாறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும்  கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் 84அடி கொள்ளளவுள்ள கபினி அணையில் 77அடிக்குத் தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 22ஆயிரத்து ஐந்நூறு கன அடியாக உள்ளது. இதனால் பாதுகாப்புக் கருதிக் கபினி அணையில் இருந்து நொடிக்கு 15ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுக் காவிரியாற்றுக்கு வந்துகொண்டிருக்கிறது. இன்றும் பலத்த மழை பெய்து வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் நாளைக்குள் அணை  நிரம்பிவிடும் என்றும், அப்போது வரத்து நீரின் அளவைவிட அதிகமாகவே திறந்துவிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல 124அடி கொள்ளளவுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4அடி உயர்ந்து தொண்ணூறு அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 28ஆயிரத்து 338கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து நொடிக்கு 394கன அடிநீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் நீர்மட்டம் நூறடியைத் தாண்டும்போது அதிலிருந்து காவிரியாற்றில் அதிக அளவுத் தண்ணீர் திறந்துவிடப்படும். கர்நாடக அணைகளில் திறக்கப்பட்டுள்ள நீர் காவிரி ஆற்றில் பாய்ந்து 2நாட்களில் தமிழக எல்லையான பிலிக்குண்டை வந்தடையும்.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

3 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

21 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

21 hours ago