மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், திங்கள்சந்தை, இரணியல், குலசேகரம்,என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கன மழை பெய்தது.
இந்நிலையில் சின்னமுட்டம், மணக்குடி உள்ளிட்ட மீனவ கிராம மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.மேலும் குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
இதேபோல் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், “தென்கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் மாறக்கூடும். அதனைத் தொடர்ந்து தெற்கு ஓமன் மறறும் வடக்கு ஏமன் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலால் தமிழகத்துக்கு மழை வாய்ப்புகள் ஏதும் இல்லை.
தெற்கு இலங்கை அருகேயும், வட தமிழகத்தின் உள் பகுதியிலும் இரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவி வருகின்றன. இவை காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…