கன்னியாகுமரியில் காதல் கணவரை கொலை செய்ய முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு!

Published by
Venu

காதல் கணவனின் நடத்தையில் சந்தேகமடைந்து,  கன்னியாகுமரி அருகே அவரின் கழுத்தை அறுத்தும் கம்பியால் தாக்கியும் கொலை செய்ய முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

களியக்காவிளை மரியகிரி பகுதியைச் சேர்ந்த ஓட்டுனரான சர்ஜின் என்பவரும், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த பிபிதா என்ற பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின் சர்ஜினுக்கு பல பெண்களுடன் முறையற்று உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கணவன் மனைவி இடையே அவ்வப்போது தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சர்ஜினுக்கும், பிபிதாவுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது சர்ஜின் பிபிதாவைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிபிதா, இன்று காலை வீட்டில் சர்ஜின் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது தலையில் இரும்புக் கம்பியால் பலமாகத் தாக்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சர்ஜின் சத்தம்போட முயலவே கத்தியால் அவரது கழுத்தை பிபிதாஅறுத்துள்ளார். இரத்த வெள்ளத்தில் சர்ஜின் கூச்சலிட்டதால் அச்சமடைந்த பிபிதா கதவுகளை பூட்டிவிட்டு தப்பினார்.

உடைகளில் ரத்தக்கரையுடன் பிபிதா தப்பிச் சென்றதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவரை பிடித்து வைத்தனர்.

மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சர்ஜினை மீட்டு கேரள மாநிலம் பாறசாலையில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பபிதாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago