கனமழையால் நீர்வரத்து பவானிசாகர் அணைக்கு அதிகரிப்பு!

Default Image

கனமழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில்  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 251 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ள நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால் நேற்றிரவு முதல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 332 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 3 ஆயிரத்து 251 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் 55 புள்ளி 66 அடியாகவும், நீர் இருப்பு 5.9 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்