தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிடம் கட்டுவதற்காக திரட்டப்பட்ட நிதியை கையாடல் செய்த வங்கி செயலருக்கு எதிராக, விசாரணை நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கணபதி பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிடம் கட்டுவதற்காக, வேளாண் கடன், நகை கடன், தனிநபர் கடன் பெறும் நபர்களிடம் கடன் தொகையில் இருந்து 10 சதவீதத்தை கட்டிட நிதியாக வங்கியின் செயலாளர் வசூலித்துள்ளார்.
அவர்களுக்கு எந்தவொரு ரசீதும் வழங்காமல், ஒரு கோடி ரூபாய்க்குமேல் வங்கி செயலாளர் நிதி திரட்டியுள்ளார். இந்த நிதியை, சொந்த விஷயத்துக்கு பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக, கொடுமுடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், விசாரணை நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
dinasuvadu.com
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…