கடலோரப்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று வீசும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published by
Venu

சென்னை வானிலை ஆய்வு மையம் ,தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதாலும், அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதாலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனச் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று காலை 6மணிக்குத் தொடங்கி அடுத்த 24மணி நேரத்துக்குக் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான கடற்பகுதிகளில் தென்மேற்குத் திசையில் இருந்து மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகம் வரை பலத்த காற்றுவீசும் எனக் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தின் வடக்குக் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும், கடலில் மூன்றரை முதல் 4.3மீட்டர் உயரம் வரை அலைகள் எழும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 45நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்று அதிகாலையிலேயே மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…

5 mins ago

முதல் படமே காதல்.. “சத்தம் போடாம கத்து” அதர்வா தம்பி – அதிதியின் ‘நேசிப்பாயா’ டீசர்.!

சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…

22 mins ago

பிக்பாஸ் சீசன் 8 எப்போது தொடங்குகிறது? போட்டியாளர்கள் யார்? விவரம் இதோ!!

சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…

29 mins ago

முடா வழக்கு : சித்தராமையா விசாரிக்கலாம்.., உயர்நீதிமன்றம் அனுமதி.!

பெங்களூரு : கர்நாடாகா மாநிலம் மைசூருவில் , மைசூரு நகர் மேம்பாட்டு ஆணையம் எனும் முடா (MUDA) எனும் திட்டத்தின்…

41 mins ago

அஸ்வினை விட நாதன் லியோன் சிறந்தவர் ! இங்கிலாந்து முன்னாள் வீரர் பேச்சு!

சென்னை : நடைபெற்ற வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் சுழல் கிங் ரவிச்சந்திரன் அஸ்வின்…

46 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. ஸ்ருதியிடம் போட்டுக் கொடுக்கும் சுதா.. ஸ்ருதியின் வேற லெவல் கான்ஃபிடன்ட் ..!

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 24] எபிசோடில் மீனா வீட்டில் கொலு வைக்க நினைக்கிறார்.. ஸ்ருதியை தூண்டி விடும்…

49 mins ago