கடலூரில் 699 பேர் தனிமை -மாவட்ட ஆட்சியர்.!

Default Image

கோயம்பேட்டில் இருந்து வந்ததாக 699 பேர் கடலூரில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வெளிமாவட்டத்திற்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு சந்தை மூலமாக இன்று காலை கடலூரில்  107 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனை அடுத்து கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கோயம்பேட்டில் இருந்து வந்ததாக 699 பேர் கடலூரில் தனிமைப்படுத்தப்பட்டு  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என  மாவட்ட ஆட்சியர்  அன்புச்செல்வன் தெரிவித்தார்.

இதுவரை கோயம்பேடு சந்தை மூலமாக சுமார் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்