பணியிடப் பாதுகாப்புக் கோரி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மருத்துவர்களைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்தும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப் படுத்தக் கோரியும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிகிச்சைக்காக வந்து காத்திருந்த நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தடுத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…