காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், விருத்தாசலத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இன்று விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் தனது தோழிக்கு விண்ணப்பப் படிவம் வாங்கச் சென்றபோது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அந்த பெண்ணை கழுத்தில் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச்சென்றுவிட்டார்.
கழுத்தில் காயமடைந்த இளம் பெண், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் காவல்துறையினர் விசாரித்ததில்,கள்ளக்குறிச்சி கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த பிரபாகரனும் அவரும் காதலித்ததும், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டதும் தெரியவந்தது.
நேற்று விருத்தாசலத்தில் காதலியை சந்தித்துப் பேசப் பிரபாகரன் முயன்றபோது அந்த பெண் மறுத்துவிட்டதும், இந்நிலையில் தோழிக்கு விண்ணப்பப் படிவம் வாங்க இன்று இளம் பெண் கல்லூரிக்குச் சென்றபோது அவரை வழிமறித்துப் பிரபாகரன் கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. இது குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, தப்பிச் சென்ற பிரபாகரனைத் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…