கடலூரில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து!

Default Image

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில்  கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், விருத்தாசலத்திலுள்ள தனியார் நிறுவனத்தில்  பணிபுரிந்து வருகிறார்.

இன்று விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் தனது தோழிக்கு விண்ணப்பப் படிவம் வாங்கச் சென்றபோது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அந்த பெண்ணை கழுத்தில் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச்சென்றுவிட்டார்.

கழுத்தில் காயமடைந்த இளம் பெண், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் காவல்துறையினர் விசாரித்ததில்,கள்ளக்குறிச்சி கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த பிரபாகரனும் அவரும் காதலித்ததும், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டதும் தெரியவந்தது.

நேற்று விருத்தாசலத்தில் காதலியை சந்தித்துப் பேசப் பிரபாகரன் முயன்றபோது அந்த பெண் மறுத்துவிட்டதும், இந்நிலையில் தோழிக்கு விண்ணப்பப் படிவம் வாங்க இன்று இளம் பெண் கல்லூரிக்குச் சென்றபோது அவரை வழிமறித்துப் பிரபாகரன் கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. இது குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, தப்பிச் சென்ற பிரபாகரனைத் தேடி வருகின்றனர்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்