கஜா புயலால் 368 முகாம்களில் 76290 பேர் தங்கவைப்பு ..!
கஜா புயலால் 368 முகாம்களில் 76290 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கஜா புயல் கரையை கடக்க உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.இதன் முன்னோட்டமாக ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கஜா புயலால் 6 மாவட்டங்களில் 368 முகாம்களில் 76290 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கஜா புயலின் முன் பகுதி நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடக்கத்தொடங்கியது.புயல் கரையை கடக்க தொடங்கியதால் நாகை, வேதாரண்யத்தில் 110 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.