கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தவறு!கமல்ஹாசன்

Default Image

கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தவறு என்று  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மீனவர்களுக்கு புதிய திட்டங்களை அறிவிக்காமல், ஏற்கனவே அறிவித்த பழைய திட்டங்களை முதலில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதேபோல் மீனவர்கள் பிரச்னையை அரசு சரிவர கவனிக்கவில்லை.நிறைவேறாமலுள்ள திட்டங்களை நிறைவேற்றிவிட்டு புதிய திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்றும்  கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இன்றைய மே(21) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:

பெட்ரோலின் விலை லிட்டருக்கு 28 பைசா உயர்ந்து ரூ.79.47 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 27பைசா உயர்ந்து ரூ.71.59 ஆக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

நேற்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 காசு உயர்ந்து ரூ.79.13 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 28 காசு உயர்ந்து ரூ.71.32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்