ஓய்வூதியம், அகவிலைப்படி நிலுவைகளை வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

Published by
Dinasuvadu desk

ஓய்வூதியம், அகவிலைப்படி நிலுவைகளை வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்கு வரத்து தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் கோட்டத்துக்கு உட்பட்ட விழுப் புரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மண்டலங்களைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கர்சன் கூறியதாவது:

போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி 2017-க்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், சமூக பாதுகாப்பு நிதி போன்ற பணப்பலன்களை வழங்க வேண்டும். ஓய்வூதிய நிலுவை, குடும்ப ஓய்வூதிய நிலுவை, அகவிலைப்படி நிலுவை, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5 நாள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரு கிறோம். முதல்நாளில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத் தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் கள் கலந்துகொண்டனர். இன்று நடக்கும் இரண்டாம் நாளில் விழுப்புரம் கோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பங்கேற்றுள்ளனர். 15-ம் தேதி வரை இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு கே.கர்சன் கூறினார்.

Recent Posts

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

3 minutes ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

18 minutes ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

1 hour ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

2 hours ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

2 hours ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

3 hours ago