ஒரே நாளில் 600 கிலோ எடையுள்ள குட்கா புகையிலைப் பொருள்களை சென்னையில் பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்துள்ளனர். மேட்டுக்குப்பத்தில் நேற்று மாலை வாகனச் சோதனை நடத்திய துரைப்பாக்கம் போலீசார், சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்றவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தில் இருந்த கண்ணகி நகர் சரவணன், நித்தியானந்தன் ஆகியோரை கைது செய்தனர்.
குட்கா பொருள்களை பாரிமுனையிலிருந்து மொத்தமாக வாங்கி, கண்ணகி நகர், மேட்டுக்குப்பம், துரைப்பாக்கம் பகுதிகளில் விற்பது தெரியவந்தது. அவர்களது வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 600 கிலோ குட்கா பொருட்கள், ஒரு இருச்சக்கர வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…