ஒரு நாளுக்கு 2 மணி நேரமே ஓய்வு…இரவு பகல் பாராமல் நிவாரணப்பணி…அதிகாரிகள் தீவிரம்…!!

Published by
Dinasuvadu desk
கஜா புயலின் கோர தாண்டவத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கஜா புயலில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது. புயல் தாக்கிய பகுதிகளில் நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் அழிந்துள்ளது. பல லட்சம் ரூபாய் நஷ்டத்தால் விவசாயிகள் வேதனையடுத்துள்ளனர். விவசாயிகள் பெரும் துயரத்தை எதிர்க்கொண்டு உள்ளார்கள். புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் முறிந்து விழுந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டம்  வேதாரண்யம் பகுதியில் பழமை வாய்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேராடு சாய்ந்துள்ளது. 20 ஆயிரம் மின்கம்பங்களும் சாய்ந்தன. இதில் சில மின்கம்பங்கள் காற்றின் வேகத்தில் தூள், தூளானது. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. சுமார் 15 ஆயிரம் வீடுகளில் மேற்கூரைகளே கிடையாது.
சாலையோரம் இருந்த பெரிய மரங்கள் எல்லாம் வரிசையாக முறிந்து விழுந்ததால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோடியக்கரை வனப்பகுதயில் கஜா புயலின் தாக்கம் கடுமையாக இருந்ததையடுத்து, சாலையெங்கும் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. இதனையடுத்து அப்பகுதியில் 25 வீரர்களை கொண்ட நான்கு பேரிடர் மீட்பு குழு, நிவாரணப்பணிகளை செய்து வருகிறது. நாள் ஒன்று இரண்டு மணி நேரமே ஓய்வெடுக்கும் அவர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதால் பணிகளை வேகமாக செய்யமுடிவதாகவும் தெரிவித்துள்ளனர். வேரோடு விழுந்துள்ள மரங்களை அகற்றுவது சவாலான வேலையாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

11 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

19 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago