புதிய செயலி,பேஸ் டேகர் (Facetagr), கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.இது குற்றங்கள் சம்பந்தப்பட்ட மக்களை பிடிக்க உதவும் செயலி ஆகும். சென்னை போலீஸ் துறையிலுள்ள தியாகராயநகர் காவல்துறை நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயல்முறை, குற்றவாளிககளை பிடிக்க பெரும் உதவியாக இருந்ததால் நகர முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து குற்ற காப்பகம் மூலம் சேகரிக்கப்பட்ட ஏறத்தாழ 45 ஆயிரம் பழைய குற்றவாளிகளின் படத்தை பதிவேற்றப்பட்டது.ரோந்து போலீஸ் சோதனையில் கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரின் படத்தை எடுத்தால், அடுத்த 10 விநாடிகளில் வழக்கு தொடர்பாக தகவல்களைப் பெறுவார். குற்றவாளிகளை சிக்க வைப்பதால் இந்த செயலியை , மற்ற மாவட்டங்களில் போலீசார் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இருப்பினும், வெளிமாநில குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகள் காரணமாக, மற்ற மாநிலங்களில் இருந்த குற்றவாளிகளின் விவரங்களை சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திர மற்றும் தெலுங்கானாவிலிருந்து பழைய குற்றவாளிகளின் விவரங்கள் அந்தந்த மாநில போலீஸ் உதவியுடன் பேஸ் டேகரில் (Facetagr) பதிவேற்றப்பட்டன.
ஒரு லட்சம் குற்றவாளிகள் விவரங்களை இதுவரை சேகரித்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கர்நாடகா மாநிலத்தில் குற்றவாளிகள் விவரங்கள் இன்னும் சில நாட்களில் பதிவேற்றப்படும். இதேபோல், வடமாநிலங்களில் பல்வேறு முக்கிய வழக்குகள் சம்பந்தப்பட்ட கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டுள்ளவர்களையும் , மேலும் நாடு முழுவதும் உள்ள குற்றவாளிகளின் விவரங்களை சேகரிக்கும் முயற்சி குற்ற ஆவண காப்பகத்தின் மூலம் தமிழக காவல் துறை இறங்கியுள்ளது
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…