ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலத்த பாதுகாப்பையும் மீறி சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போட முயற்சி…!

Published by
Venu

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலத்த பாதுகாப்பையும் மீறி  பூட்டு போட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த அரசியல் கட்சிகள், தமிழக அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன. இந்நிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போலீசாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே ஒன்று கூடிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் MA சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தின் ஒரு நுழைவாயிலுக்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் அனைவரையும் கைது செய்தனர்.

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என, பல்வேறு தரப்பினரும், போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனையடுத்து, சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி, சுமார் 4 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உளவு போலீசார், ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, கிரிக்கெட் வீரர்களுக்கும், சேப்பாக்கம் மைதானத்திற்கும், கூடுதல் ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

36 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

40 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

2 hours ago