ஐ.நா.வின் அறிக்கையை குப்பைத் தொட்டியில் வீசுங்கள் !சுப்பிரமணியன் சுவாமி

Default Image
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ,காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையை குப்பைத் தொட்டியில் வீசுங்கள் என  கூறியுள்ளார்.
 ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம்  ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 49 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் நடந்த அப்பாவி மக்கள் படுகொலைகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும், காஷ்மீரில் பெலட் துப்பாக்கிகள் மூலம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது மனித உரிமை மீறல் என்றும் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையை ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைய தலைவர் ஸெய்த் ராத் அல் ஹுசைன் வெளியிட்டார்.
இந்த அறிக்கை குறித்து பாஜக மூத்த தலைவரும், பாஜக எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், ‘ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையை நான் குப்பைத்தொட்டியில் தான் வீசி எறிந்திருப்பேன். இந்த அறிக்கையை தயாரித்தவர்களை நரகத்தில் தள்ள வேண்டும் என்றுதான் நான் கூறுவேன். காஷ்மீர் விவகாரம் பற்றி தெரியாதவர்கள் தயாரித்த அறிக்கை என்பதால், அவர்கள் குறித்து நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்