ஐ.ஜி பொன். மாணிக்கவேலுக்கு பணி நீடிப்பு …வரவேற்கத்தக்கது..!எச்.ராஜா..!!

Default Image
சிலை கடத்தல் தடுப்புபிரிவு காவல் ஐ.ஜி பொன். மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பணி நீடிப்பு வழங்கியதற்கு ஹெச் ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Image result for பொன் மாணிக்கவேல்
இன்று ஐ.ஜி பொன். மாணிக்கவேல் தனது பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு அதிகாரியாக அவரை ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் அவர் இன்னும் பல சிலை கடத்தும் கயவர்களை பிடிப்பார் என்று தெரிகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் மேல்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவிக்கையில் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படாத பல சிலை கடத்தல் வழக்குகளில் பொன்.மாணிக்கவேல் அதிரடியாக துப்பு துலக்கி கண்டுபிடித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர் ஓராண்டு பணி நீட்டிப்பு அவருக்கு வழங்கியது வரவேற்புக்கு உரியது.இதனை பாஜக வரவேற்கிறது என அவர் குறிப்பிட்டார்.மேலும் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்திலுன் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்