ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படாது…!

Default Image

ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்து சங்கங்கள் சென்னையில் கூட்டாக அறிவித்துள்ளது.

அரசு பஸ் தொழிலாளர்களும் 5ம் தேதி நடக்கும் முழு வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 5-ம் தேதி முழு வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த முழு அடைப்பில் தொ.மு.ச, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 15 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. இச்சங்கங்களின் தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்