எஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!

Published by
Venu

நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகரை ,பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த மாதம் தனது ஆளுநர் மாளிகையில் பேட்டி கொடுத்தார். அப்போது பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தொட்டுப் பேசியது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் தனக்கு வந்த ஒரு பதிவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் சர்ச்சை எழுந்தது.

இதன்காரணமாக, எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே 10-ம் தேதியன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி எஸ்.வி.சேகர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த சம்பவத்துக்கு எஸ்.வி.சேகர் ஏற்கெனவே மன்னிப்பு கோரிவிட்டார். அந்தப்பதிவையும் உடனடியாக நீக்கி விட்டார்.

அவருக்கு வந்த செய்தியை அப்படியே பார்வர்டு செய்தது மட்டுமே அவருடைய தவறு’’ என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், வரும் ஜூன் 1-ம் தேதி வரை எஸ்.வி.சேகரை கைது செய்யக்கூடாது என தமிழக போலீஸாருக்கு அறிவுறுத்தி, இது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

27 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

40 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

55 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

58 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

1 hour ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

1 hour ago