” என் மீது அவருக்கு அதிக அன்பு..!! அதனால் கூடுதலாக பிரியாணி கொடுத்தார் “..! நானும் அவருக்கு என்னையே கொடுத்தேன்..!! அபிராமி அளித்த அதிர்ச்சியான வாக்குமூலம்..!!
சென்னை:
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில்வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி அபிராமி (25) நேற்று முன்தினம் இவருடைய குழந்தைகளான அஜய் (7) மற்றும் கார்னிகா (4)வை விஷம் வைத்து கொன்று கன்னியாகுமரியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்..
குன்றத்தூர் காவல்துறையினர் இன்று அபிராமியை விசாரித்த போது அவர் தனது பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது ,
குன்றத்தூர் கெங்கையம்மன் கோயில் தெருவில் உள்ள பிரியாணி கடை ஊழியரான வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர் தான் சுந்தரம்.சுந்தரத்திற்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.இந்நிலையில் தான் எனக்கும் சுந்தரத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. என் வீட்டுக்கு பிரியாணி ஆர்டர் செய்யும் சுந்தரம்தான் பிரியாணியை எடுத்து வருவார் என்று அபிராமி கூறினார்.
மேலும் அபிராமி அளித்த வாக்குமூலத்தில் ,
சுந்தரம் என்னிடம் இருந்த அன்பு காரணமாக ஒவ்வொரு முறையும் கூடுதலாக பிரியாணி கொண்டு வருவார்.இப்படி 2 மாதங்களாக தொடந்த எனக் நட்பு வளர்ந்தது. அது காமத்தில் முடிந்தது. மேலும், என் கணவர் இரவு பணி என்று அடிக்கடி சென்றுவிடுவதால், என் இளமை என்னை தூங்க விடவில்லை. என் இளமையை ரசித்து, அடிக்கடி என்னை வர்ணித்த சுந்தரத்துக்கு என்னை கொடுக்க முடிவு செய்தேன். எனவே அடிக்கடி இருவரும் உல்லாசம் அனுபவித்தோம் என்று அபிராமி கூறினார்.
எங்களின் இந்த நெருக்கமான உறவுக்கு கணவர் , குழந்தைகள் தடையாக இருப்பார்கள் என்ற காரணத்தினால் அவர்களை கொலை செய்ய முடிவு செய்து 30ம் தேதி இரவு பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கணவர் மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொடுத்தேன். மறுநாள் அதிகாலையில் 3 பேரும் இறந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், கணவன் மற்றும் மகன் அஜய் ஆகியோர் சாகவில்லை.
காலை கணவரும் , என்னுடைய மகனும் சாவில்லை என்று தெரிந்ததும் மீண்டும் திட்டம் தீட்டினேன்.காலையில் என் கணவர் வேலைக்கு சென்ற பின்பு மகன் அஜய்யை படுக்கை அறையில் வைத்து மூக்கையும், வாயையும் பொத்தி துடி துடிக்க கொன்றேன்.இரவு நேரம் நெருங்கி விட்டதால் கணவறையும் கொலை செய்ய அவரின் வருகைக்காக காத்திருந்தேன்.
ஆனால் கடந்த 31ம் தேதி மாத கடைசி நாள் என்பதால் வேலை பளு காரணமாக விஜய் வீட்டிற்கு வரவில்லை.கணவர் காலையில் வந்தால் நான் சிக்கிக் கொள்வேன் என்பதால் இது குறித்து சுந்தரத்திடம் ஐடியா கேட்டேன். உடனே சுந்தரம் தன் வீட்டிற்கு என்னை அழைத்தார். இரவு முழுவதும் நானும் சுந்தரமும் ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் உல்லாசமாக இருந்தோம்.விடிய தொடங்கியதும் சுந்தரதிடம் நான் எனது வீட்டிற்கு செல்கிறேன்.அப்போது தான் யாருக்கும் நம்மீது சந்தேகம் வராது என்றேன்.
அதற்க்கு சுந்தரம் நீ உனது மொபட்டை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருந்து பேருந்தில் ஏறி கன்னியாகுமரிக்கு சென்று விடு என்று சுந்தரம் தெரிவித்தார்.
பின்னர் சுந்தரம் 2 நாட்களில் நிலமை சகஜமானதும் நானும் கன்னியாகுமரி வந்து உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறி என்னை அனுப்பி வைத்தான்.சிம்கார்டைவைத்து இருந்தால் நாம் மாட்டிக் கொள்வோம் என்று எண்ணி சிம் கார்டை உடைத்தேன்.ஊருக்கு செல்ல கையில் பணம் இல்லாததால் கணவன் கட்டிய தாலியை கோயம்பேட்டில் ஒரு அடகு கடையில் அடமானம் வைத்து கிடைத்த ₹50 ஆயிரத்துடன் பேருந்தில் ஏறி கன்னியாகுமரிக்கு சென்றேன்.என்று கைதான அபிராமி போலீசில் வழக்கு மூலம் அளித்துள்ளார்.
தன்னுடைய காம ஆசை மற்றும் இளமையின் வேகத்தில் எனது காம இச்சையை தீர்த்துக்கொள்வதற்காக நான் பெற்ற குழந்தைகளை எனது கைகளால் கொடூரமாக கொலை செய்து விட்டேன் என்றும் அபிராமி வாக்குமூலத்தில் தெரிவித்ததாக கூறப்படுகின்றது…
DINASUVADU