என் காலில் யாரும் விழக்கூடாது…!! முக.ஸ்டாலின் அதிரடி.

Default Image

திமுகவின் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராகப் பொறுப்பேற்ற போதே, கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் தனது காலில் விழுந்து வாழ்த்துப் பெறுவதைத் தவிர்க்க வேண்டும் என அன்பான வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அப்போதே தலைமை கழகத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தன்மானம் சுயமரியாதை பகுத்தறிவு செறிந்திருக்கும் திராவிட இயக்கத்தின் அடிப்படை அடையாளமாக, நெஞ்சம் நிமிர்த்தி அன்பு ததும்ப “வணக்கம்” செலுத்துவதே தலைமைக்குத் தரும் மரியாதை என்பதை அப்போதே குறிப்பிட்டிருந்தார்.

தற்போது திமுகவின் தலைவராக அவர் பொறுப்பேற்றுள்ள நிலையில், வாழ்த்து தெரிவிக்க வருகின்ற பலரும், ஆர்வ மிகுதியால் அவர் காலில் விழ முயற்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனத் தலைமைக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்படுகிறது.

திமுகவின் கழகத் தலைவருக்கு வணக்கம் செலுத்தி வாழ்த்து தெரிவிப்பதே, திராவிட முன்னேற்றக் கழகம் போற்றி வளர்த்துவரும் பண்பாட்டுக்குப் பெருமை சேர்க்கும் செயலாகும் என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் காலில் தொண்டர்கள் விழுவதால் அவருக்கு மன சங்கடத்தை ஏற்படுத்துகின்றது என்று இதை நாம்   கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது…
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்