என்னால் பிக் பாஸ் மற்றும் அரசியல் ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியும்!கமல்ஹாசன்

Published by
Venu

என்னால் பிக் பாஸ் மற்றும் அரசியல் ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தவறு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மீனவர்களுக்கு புதிய திட்டங்களை அறிவிக்காமல், ஏற்கனவே அறிவித்த பழைய திட்டங்களை முதலில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதேபோல் மீனவர்கள் பிரச்னையை அரசு சரிவர கவனிக்கவில்லை.நிறைவேறாமலுள்ள திட்டங்களை நிறைவேற்றிவிட்டு புதிய திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசன்:

தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. ‘பிக்பாஸ்’ முதல் தொடரில் நடிகைகள் ஓவியா, ஆர்த்தி, நமீதா, பிந்துமாதவி, காயத்ரி. நடிகர்கள் ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், கவிஞர் சினேகன், வையாபுரி, சக்தி, கஞ்சாகருப்பு, பரணி உள்பட 15 பேர் பங்கேற்றனர்.

வெளியுலக தொடர்பு இல்லாமல் தனிவீட்டில் இருக்கும் இவர்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சினைகள், உடன் இருப்பவர்களுடன் பழகும் முறை, இவர்களுடைய தினசரி நடவடிக்கைகள் ஆகியவை 100 நாட்கள் ஒளிபரப்பாகின.

கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தனிவீட்டில் இருப்பவர்களின் நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்வார். அவர்களுடன் கலந்துரையாடுவார். அறிவுரைகளை வழங்குவார். வாரந்தோறும் ஒருவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்படுவார்.

இதில் கமல்ஹாசனின், உரையாடல், அறிவுரை, அந்த அந்த நாட்களுக்கு ஏற்ப இடம் பெற்ற அவரது பேச்சு ஆகியவை மிகவும் ரசிக்கப்பட்டது. அரசியல் குறித்தும் பேசினார். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது.

முதல் நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ் கடைசி வரை இடம் பெற்று பரிசை வென்றார். நடிகை ஓவியா உள்பட பலருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமாகின. ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியை நடத்துவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

பிக்பாஸ் இரண்டாவது  சீசன்:

கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். எனவே, அவர் ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியை நடத்த மாட்டார். சூர்யா, அரவிந்சாமி அல்லது பிரபல ஹீரோ ஒருவர் நடத்துவார் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்துகிறார் . அதற்கான டீசர் வெளியானது .தற்போது அதன் மற்றொரு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது விஜய் டிவி .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

12 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

20 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago