எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிப்பு !

Published by
Venu

தமிழக சட்டப்பேரவை முன்பு, விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையை தடை செய்ய வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டபடியே வந்தனர்.

சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே வந்த அவர்கள், ராஜாஜி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, அரசுக்கு எதிராக முழக்கமிட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, அங்குவந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

மாலையில் சுமார் மூன்றரை மணியளவில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலவரத்தை தூண்டும் வகையில் ரதயாத்திரை நடப்பதாக கூறியதுடன், தமிழகத்தில் நடப்பது பாஜக ஆட்சியா அல்லது அதிமுக ஆட்சியா என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago