எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிப்பு !

Default Image

தமிழக சட்டப்பேரவை முன்பு, விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையை தடை செய்ய வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டபடியே வந்தனர்.

சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே வந்த அவர்கள், ராஜாஜி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, அரசுக்கு எதிராக முழக்கமிட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, அங்குவந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

மாலையில் சுமார் மூன்றரை மணியளவில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலவரத்தை தூண்டும் வகையில் ரதயாத்திரை நடப்பதாக கூறியதுடன், தமிழகத்தில் நடப்பது பாஜக ஆட்சியா அல்லது அதிமுக ஆட்சியா என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்