எச்.ஐ.வி பாதித்த ரத்தம்: சுகாதாரத்துறையின் மெத்தன போக்கால் மொத்தமாக வாழ்க்கையை இழந்த கர்ப்பிணி..!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை ஊழியர் செலுத்திய விவகாரம் தொடர்பாக நோயாளிகளுக்கு ரத்த வங்கியில் இருந்து ரத்தம் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஆனால் தன் வயிற்றில் உள்ள குழந்தை மற்றும் தன் வாழ்க்கையை மொத்தமாக அரசு ஊழியரின் மெத்தன போக்கால் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் அரசு மருத்துவமனையின் மீதான நம்பகத்தன்மையை கேள்வி குறியாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.