உரிய நிவாரணம் மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு கிடைக்கவில்லை! உரிமையாளர்கள் வேதனை

Published by
Venu

இன்றுடன்  சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து நிகழ்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்கள், இதுவரை தங்களுக்கான நிவாரணம் வேண்டி காத்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

மவுலிவாக்கம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி  இடிந்து விழுந்த விபத்தில் 61பேர் உயிரிழந்தனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் அருகிலிருந்த மூன்று வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீட்டை இடிந்து விழுந்த கட்டிடத்தின் உரிமையாளர் வழங்கிட முன்வராத நிலையில், அரசாங்கமாவது வழங்கும் என்று நம்பி கடந்த 4 ஆண்டுகளாக சம்மந்தப்பட்ட அலுவலகங்களின் படிகளில் ஏறி ஏராளமான மனுக்களை கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். ஆயினும் இதுவரை தங்களுக்கான விடிவுகாலம் பிறக்கவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உழைத்து சேர்த்து கட்டி, வாழ்ந்த வீட்டை யாரோ செய்த தவறுகளால் இழந்து, இன்றைக்கு வாடகை வீட்டில் வாழ்ந்து வரும் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by
Venu

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

9 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

9 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

9 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

9 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

10 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

10 hours ago