சென்னை உயர்நீதிமன்றம் ,108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட அவசர வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது.
சேலம் ஆத்தூரை சேர்ந்த செல்வராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 4 ஆயிரத்து 750 பேர் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது சுட்டிக்காட்டப்பட்டது.
போராட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள் என்றும், இதன் மூலம் மருத்துவ அவசர சிகிச்சைகள் அளிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
இதேபோன்ற வழக்கில் முந்தைய தடை உத்தரவுகளை சுட்டிக்காட்டி தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் மனுதாரர் முறையீடு செய்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…