உத்தமபாளையம் அருகே முத்துலாபுரத்தை சேர்ந்த முருகன் மனைவி மலர்(வயது42). இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். முத்துலா புரம் அருகே சென்றபோது சாலையோரம் கேபிள் டிவி பராமரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த ஏணி திடீரென சரிந்து இவர்கள் மீது விழுந்தது.
இதில் மலர் படுகாயமடைந்து உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்…
உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியை சேர்ந்த ஆறுமுகக்குமார், கபிலேஷ், கார்த்திக் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்பகுதியில் உள்ள தனியார் மதுக்கடை அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர பள்ளத்தில் கவிழந்தது. இதில் ஆறுமுககுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மற்ற 2 பேரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…