உதகையில் யானைகள் வழித்தடங்களில் கட்டப்பட்ட 27 தனியார் குடியிருப்பு கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கபட்டுள்ளது. குடியிருப்புகளுக்கான அனுமதி பெற்றுவிட்டு சொகுசு விடுதிகளாக இயங்கிய கட்டடங்களுக்கு காவல்துறை பாதுகாப்புடன் அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.
கடந்த, 30 ஆண்டுகளில், நீலகிரி மாவட்டம், கல்லாறு, குரும்பாடி, கோத்தகிரி, சோலுார், பொக்காபுரம், மசினகுடி, கூடலுார், பந்தலுார், ஓவேலி பகுதிகளில், யானை வழித்தடத்தில், நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள், சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
கோடை காலங்களில் தண்ணீர், உணவுக்காக இடம் மாறும் யானைகள், வழிமாறி சென்று, குடியிருப்புகள் மற்றும் வேளாண் தோட்டங்களுக்கு சென்று சேதம் விளைவிக்கின்றன. வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில், மனித- யானை மோதல் அடிக்கடி நடந்து வருகிறது.
இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், நீலகிரி மாவட்ட நிர்வாகம், யானை வழித்தடங்களில், உள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்த போது, அதில் குடியிருப்பு, விடுதிகள் என, 840 கட்டுமானங்கள் இருந்தது தெரியவந்தது.
மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையின் போது, ‘நீலகிரியில், முதற்கட்டமாக, 39 சுற்றுலா விடுதிகள் உரிய அனுமதி விட்டிற்கு வாங்கி கொண்டு சுற்றுலா விடுதிகளை கட்டியுள்ளது இதனை உள்ளடக்கிய, 309 கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டது.
யானை வழிதடத்தில் கட்டிய தனியார் சொகுசு விடுதிகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…