உடலுறுப்புகளை திருடிய சேலம் மருத்துவமனை நிர்வாகம்..! நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு-கேரள முதல்வர் கடிதம்..!!

Published by
kavitha

பாலக்காட்டை சேர்ந்த  மணிகண்டன் என்பவர் கடந்த மே 18ம் தேதி 6 பேருடன் சென்னையிலிருந்து காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் அருகே விபத்து ஏற்பட்டது. அதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் மணிகண்டன், சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த மணிகண்டன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் மே 20ம் தேதி தெரிவித்தனர். இதையடுத்து சிகிச்சை கட்டணமாக ரூ.3.25 லட்சத்தையும் அவரது உடலை பாலக்காடு வரை கொண்டு சேர்க்க 25000 ரூபாயையும்  அவரது குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளது.

ஆனால் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து மணிகண்டனின் உடலுறுப்புகளை எடுத்து கொண்டு அவரது உடலை மட்டும் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் மணிகண்டனின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேரள முதல்வர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் மணிகண்டனின் குடும்பத்தினரின் அனுமதியோடு தான் அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. பணத்திற்காக உடல் உறுப்புகள் திருடப்பட்ட இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளிக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Published by
kavitha

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago