உடலுறுப்புகளை திருடிய சேலம் மருத்துவமனை நிர்வாகம்..! நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு-கேரள முதல்வர் கடிதம்..!!

Default Image

பாலக்காட்டை சேர்ந்த  மணிகண்டன் என்பவர் கடந்த மே 18ம் தேதி 6 பேருடன் சென்னையிலிருந்து காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் அருகே விபத்து ஏற்பட்டது. அதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் மணிகண்டன், சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த மணிகண்டன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் மே 20ம் தேதி தெரிவித்தனர். இதையடுத்து சிகிச்சை கட்டணமாக ரூ.3.25 லட்சத்தையும் அவரது உடலை பாலக்காடு வரை கொண்டு சேர்க்க 25000 ரூபாயையும்  அவரது குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளது.

ஆனால் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து மணிகண்டனின் உடலுறுப்புகளை எடுத்து கொண்டு அவரது உடலை மட்டும் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் மணிகண்டனின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேரள முதல்வர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் மணிகண்டனின் குடும்பத்தினரின் அனுமதியோடு தான் அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. பணத்திற்காக உடல் உறுப்புகள் திருடப்பட்ட இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளிக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்