கூட்டுறவு சங்க மேலாளர் , ஈரோடு அருகே தமிழக அரசின் விலையில்லா வேட்டிசேலையை வெளிமார்கெட்டில் விற்று 5 கோடியே 30 லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
சென்னிமலையில் இயங்கி வரும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் செந்தில்குமார் என்பவர் மேலாளராக பணியாற்றினார். இச்சங்கத்திற்கு தமிழக அரசுக்காக விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரையிலும் உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி, சேலைகள் வெளிமார்க்கெட்டில் விற்று கையாடல் செய்யப்பட்டிருப்பதாக கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் பிச்சை முத்து ஈரோடு வணிக குற்ற புலனாய்வு பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரித்த காவல்துறையினர் கையாடல் நடைபெற்றது உறுதியானதைத் தொடர்ந்து, இதில் தொடர்பிருப்பதாக கூட்டுறவு சங்கத்தின் மேலாளர் செந்தில்குமாரை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…