இல்லத்தரசிகளுக்கு ஷாக்…தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு!

Default Image

சென்னை:இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.36,448-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு.ஏனெனில்,தங்கத்தை வாங்குவது என்பது ஒரு புத்திசாலித்தனமான முதலீடு ஆகும்.இதனால்,தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பெண்கள் பலரும் உற்று கவனிப்பதுண்டு. காரணம்,தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் உள்ளது.அந்த வகையில் தங்கம் விலை சமீப நாட்களாக அதிகரித்து காணப்பட்டது.

எனினும்,சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து,ஒரு சவரன் ரூ.36,296-க்கு விற்பனை செய்யப்பட்டது.மேலும்,ஒரு கிராம் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ரூ.11 குறைந்து, ரூ.4,537-க்கு விற்பனையானது.

இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.36,448-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல,22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 உயர்ந்து,ஒரு கிராம் ரூ.4,556-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும்,சில்லறை வணிகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் உயர்ந்து ரூ.66.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை உயர்வு என்பது இல்லத்தரசிகளுக்கு சற்று அதிருப்தியாகவே உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்