இரண்டே நாட்களில் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு பயணம்!

Published by
Venu

சென்னையில் இருந்து மட்டும் இரண்டு நாட்களில் 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் இருந்து பயணிகள் சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில், போராட்டத்தை கைவிட்டு நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதால் பல்வேறு நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இதனிடையே, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார். பொங்கலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் பொங்கல் கொண்டாடுவதற்காக சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர் சென்றதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
source: dinasuvadu.com

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago