இப்படியும் ஒரு தலைமை ஆசிரியரா.? தனியார் பள்ளியை மிஞ்சிய அரசுப்பள்ளி..!

Default Image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசு வைத்தான்பட்டி பன்னை கிராமத்தில்15 மாணவர்கள் மட்டுமே பயிலும் அரசு பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வருகிறது.இப்படி ஒரு பள்ளியை பார்க்க படிக்க அனைவருக்குமே ஆசை இருக்கத்தான் செய்யும்.

கணினி  பயிற்சி, கராத்தே, யோகா ஆகியவை மாணவர்களுக்கு கற்று தரப்படுகிறது.  இந்த சிறப்பு பயிற்சிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தனது சொந்த செலவில் பயிற்சியாளர்களை நியமித்து கற்று கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாணவ மாணவிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக மினரல்வாட்டர் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு அரசு முத்திரையுடன் கூடிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்