இன்றுடன் தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் முடிவு!

Default Image

இன்றுடன் தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்  முடிவடைகிறது.  2018- 2019ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு, கடந்த 10ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன. தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

மேலும் www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற தளத்திலும் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பங்களை வழங்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் கூறியிருந்தது. இந்நிலையில் விண்ணப்பங்கள் வாங்குவதற்கு இன்றே கடைசி நாள் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்திருந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மாலை 5 மணிக்கு முன்னதாக குறிப்பிட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்