இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது!முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Published by
Venu

முதல்வர் எடப்பாடி பழனிசாமி,நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது என  திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின் போது ஜல்லிக்கட்டுப் போல ஸ்டெர்லைட் விவகாரத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அப்போது ஸ்டெர்லைட் ஆலை சார்பாக அளிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் எங்கே என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக பேரவையில் பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்ட வல்லுநர்கள், மூத்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்தே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், நிலம் வழங்கும் ஆணை உள்ளிட்ட அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். ஜனநாயக ரீதியாக போராட மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகளே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

17 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

30 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

41 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

48 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago