இனி சிங்கிள் டீயால் புற்று நோய்!அதிரவைத்த ரசாயனம் கலந்த கலப்பட டீ தூள் விற்பனை!

Published by
Venu

கலப்பட தேயிலை தொழிற்சாலை சென்னையில் குடியிருப்பு பகுதி ஒன்றில் செயல்பட்டு வந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. உடலுக்கு புத்துணர்வு அளிக்க கூடிய தேயிலையில் புற்று நோய் வரவழைக்கும் ரசாயணங்கள் கலக்கப்படும் பின்னணி குறித்து விவரம்

தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகர்பகுதிகள் வரை அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் தேனீர் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகின்றது

சென்னையில் இந்த டீக்கடைகளை குறிவைத்து ரசாயனம் கலந்த கலப்பட டீ தூள் விற்பனை கொடிகட்டிப்பறப்பதாக உணவுப்பொருள் பாதுகாப்புதுறையினருக்கு புகார்கள் குவிந்தன.

பிரபல நிறுவனங்களில் டீ தூள் பாக்கெட்டுகளை வாங்கும் டீக்கடைகாரர்கள், அதிக வண்ணம் வேண்டும் என்பதற்காக அதில் இந்த கலப்பட தேயிலையை கலந்து டீ தயாரித்து விற்பனை செய்வதாக கூறப்படுகின்றது. டீக்கடைகளில் பயன்படுத்தும் தேயிலையை குளிர்ந்த நீரில் கலந்து பாருங்கள் நிறம் மாறினால் அது கல்லப்பட தேயிலை..! நிறம் மாறவில்லை என்றால் அது தரமான தேயிலை என்று உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி வந்தனர்…!

இந்த நிலையில் சென்னையில் அரும்பாக்கம், செந்தில்நகரில் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வந்த கலப்பட தேயிலை தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளமாநிலத்தை சேர்ந்த தாமஸ் என்பவரது தேயிலை குடோனில் இருந்து தான் இது போன்ற ரசாயண கலப்பட தேயிலை பாக்கெட்டுக்கள் டீக்கடைகளுக்கு பாதிவிலைக்கு சப்ளை செய்யப்படுவது தெரியவந்ததையடுத்து அங்கு அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர்.

அங்கிருந்த தேயிலை தூளை தண்ணீரில் போட்டு பரிசோதித்த போது தண்ணீரின் நிறம் மாறியது..! அங்கிருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 டன் கலப்பட தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது.

அங்குள்ள தேயிலையில் மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் 3 விதமான ரசாயனங்கள் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது மட்டமான 1 கிலோ டீ தூளில் 10 கிராம் டார்ட்ராசைன், ஹார்மோ சைன், சன்செட் எல்லோ ஆகிய ரசாயனங்கள் கலக்கப்படுவதால் அந்த தேயிலை கலவையை பயன்படுத்தும் நபர்களுக்கு நாளடைவில்  புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகின்றது.

கலப்பட தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் தாமஸிடம் நடத்திய விசாரணையில் அவர் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து மட்டமான தேயிலையை டன் கணக்கில் வாங்கி வந்து அதில் ரசாயண கலவையை சேர்த்து, மெரினா, ஹில் டாப், மவுண்டன் குளோரி போன்ற பெயர்களில் பாக்கெட்டுகளில் அடைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தாமஸ் ஏற்கனவே ஒருமுறை கலப்பட வழக்கில் சிக்கியவர் என்பதால் அவரது தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

சிங்கிள் டீ யின் விலை 10 ரூபாய்..! விலைகொடுத்து புற்று நோயை வாங்கிச்செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்க கடைகளில் தரமான தேயிலை தான் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டிய தருணம் இது..!

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

8 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago