எண்ணை நிறுவனங்கள் சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் ‘சப்ளை’ செய்ய ஏற்பாடு செய்து வருகிறது.
எண்ணை நிறுவன அதிகாரிகள் இதுகுறித்து கூறியதாவது:-
தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கும், ஓட்டல்களுக்கும் தனித்தனியாக வெவ்வேறு அளவில் உள்ள சிலிண்டர்களில் சமையல் கியாஸ் ‘டோர்’ டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 23 கோடி பேர் உள்ளனர். தமிழகத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வருகின்றன.
இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக பூமிக்கடியில் குழாய் பதித்து வீடுகளுக்கு சமையல் கியாஸ் வினியோகம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தற்போது டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதே போல் தமிழகத்தில் முதற் கட்டமாக சென்னையில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் வினியோகம் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது.
எண்ணூரில் இயற்கை எரிவாயு முனையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் சென்னையில் பூமிக்கடியில் வீதி வீதியாக குழாய் பதிக்கும் பணி நடைபெறும்.
குடிநீர் குழாய் பதிப்பது போன்று சமையல் கியாசை கொண்டு செல்ல குழாய் பதிக்கப்படும். இதில் இருந்து கனெக்ஷன் பெறுபவர்களது வீடுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு கணக்கிடப்படும்.
வீட்டுக்கு வரும் குழாய்களில் குறைந்த அழுத்தத்தில் கியாஸ் செலுத்தப்படும். சிலிண்டரில் சமையல் கியாஸ் கொண்டு செல்வதை விட இது மிகவும் பாதுகாப்பானதாகும்.
வழக்கமாக சிலிண்டர்களுக்கு செலவிடப்படும் தொகையை விட இதற்கு செலவு குறைவாக இருக்கும்.
குறிப்பாக சிலிண்டர்களை வினியோகம் செய்யும் ஊழியர்களுக்கு கூடுதல் தொகை கொடுப்பது மிச்சமாகும். அத்துடன் சிலிண்டர் வாங்க ‘புக்கிங்’ செய்து விட்டு நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சென்னையில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு சமையல் அறைக்கும் குழாய் மூலம் கியாஸ் பெறும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…