இந்தியாவை வழிநடத்த மோடியை விட ஸ்டாலின் குட்…சந்திரபாபு நாயுடு தடாலடி…!!

Published by
Dinasuvadu desk

பாஜகவிற்கு எதிராக ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு உருவாக்கும் தேசிய அளவிலான கூட்டணிக்கு திமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு  அந்தஸ்து அளிக்கவில்லை என்று  குற்றஞ்சாட்டிய சந்திரபாபு நாயுடு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.இதனையடுத்து , பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு  எதிராக நாடு தழுவிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  தேசியவாத காங்கிரஸ்  தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி உமர் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோரை கடந்த 1 ஆம் தேதி சந்தித்தார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா, மதசார்பற்ற ஐனதா தளம் கட்சி தலைவரும் கா்நாடகா முதல்வருமான குமாரசாமி ஆகியோரை நேற்று      (வியாழக்கிழமை) சந்தித்து பேசினார்.இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்த சந்திரபாபு நாயுடு,  நாடாளுமன்றம தேர்தலை முன்னிட்டு பாஜக அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒர் அணியாக செயல்படுவது குறித்து விவாதித்தார்.

இதனையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாவின், “மத்தியில் மக்கள் விரோத மோடி ஆட்சியை  வீழ்த்த சந்திரநாயுடு எடுத்திருக்கும் மதசார்பற்ற கூட்டணி முயற்சிக்கு  திராவிட முன்னேற கழகம் ஆதரவு அளிக்கிறது ” என கூறினார்.இதைத்தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, ” சி.பி.ஐ, ஆர்.பி.ஐ போன்ற தன்னாச்சி அமைப்புகளை மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் அரசு செயல்பட வில்லை, டெல்லியில் உள்ளவர்கள் தான் தமிழகத்தை இயக்குகின்றனர்.

தேசிய ஐனநாயக கூட்டணி தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. மோடியை விட நாட்டை சிறப்பான முறையில் மு.க.ஸ்டாலின் வழி நடத்துவார். பாஜகவிற்கு எதிரான உருவாக்கப்படும் இந்த கூட்டணிக்கு தலைவர் நான் இல்லை. நான் வேறும் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே ” என்றார்.இந்த கூட்டணி முயற்சியில்  அடுத்தப்படியாக திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பேனர்ஜியை சந்தித்து பேச உள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதால், பாஜகவுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றன.

dinasuvadu.com

Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

14 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago