இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுத்தால்-தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.!பால்வளம் பாய்ச்சல்

Default Image
  • இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாய்ச்சல்
  • தீவிரவாதத்தை தூண்டும் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று ஆவேசம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பும்,போரட்டமும் வழுபெற்று வரும் நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் விருநகர் மாவட்டம் ஆனைக்குட்டம் பகுதியில் ஈடுபட்டார்.அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் மக்கள் அதிமுக ஆட்சி தான் தொடர வேண்டும் என்று எண்ணுகின்றனர்.அதிமுகவின் வாக்குகளை யாராலும் பிரிக்க முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.ஆனால் சட்டம் தொடர்பான உண்மை ஒரு நாள் தெரியவரும் அப்போது இச்சட்டம் குறித்து தெரிந்து கொள்வார்கள்.தற்போது எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் இனவாதத்தையும் ,மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தையும் பரப்பி வருகிறார்.மத்திய அரசு இந்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிய போதிலும் முஸ்லீம் மத ஜமாத் மூத்த தலைவர்கள் ஆதரித்து கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் சட்டத்திற்கு எதிராக ஸ்டாலின் போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. மேலும் இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசுகள் கைது செய்ய வேண்டும்.தீவிரவாதத்தை தூண்டும் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்